Sunday, October 17, 2010

எந்திரன் - தமிழில் வந்த முதல் இங்கிலீஷ் படம்

கடந்த வாரத்தில் இரு முறை திரையரங்கிற்குச் சென்று எந்திரன் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை தேவி, பிறகு ஸ்வர்ணசக்தி அபிராமி (இரண்டு திரையரங்கிற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறதா?!)

படம் பார்த்த பெரும்பாலோர்க்கு இத்திரைப்படத்தின் முழு 'கண்டெண்ட்'டும் புரியவில்லை என்பது வருத்தமே. நிறைய 'டெக்னிகல்' விஷயங்களை விஷுவலாகக் காட்டியிருக்கிறார்கள். அதிகம் படித்தவர்களே அவற்றை படத்தின் வேகத்தில் ஸ்கிப் செய்திருக்கக்கூடும்.

உதாரணத்திற்கு 'எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்'ஐ எடுத்துக் கொள்வோம். எந்திரன் தீ விபத்தில் மாட்டிக்கொண்டவர்களை பறந்து பறந்து காப்பாற்றுவதாகக் காட்டுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் 'எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்' ஆக்டிவேட் செய்யப்படுகிறது. எலக்ட்ரோ மேக்னட் என்பது வெறும் இரும்பாக இருக்கும். மின்சாரம் செலுத்தப் பட்டவுடன் காந்தமாக மாறுகிறது. அந்த காந்தத்தை இரும்பை நோக்கிக் குவிக்கும் போது, இரும்பு வந்து ஒட்டிக்கொள்கிறது அல்லது அந்த இரும்பை நோக்கி, எந்திரன் ஈர்க்கப்படுகிறது. இதை சிறு அளவில் உரையாடலில் விளக்கியிருக்கலாம்.

அடுத்து, 'விஷுவல் ப்ளீச்'. எந்திரன்களை நோக்கி டாலடிக்கும் போது அது செயலற்றுப் போகிறது.

அடுத்து 'ஃபார்மேஷன் மோட்'. எலக்ட்ரோ மேக்னடிக் மோட் மூலமாக எந்திரன்கள் தங்களுக்குள்ளே பிரமிட், க்ளோப், சுவர், மனிதன், பாம்பு போன்ற வடிவங்களை எடுத்துக் கொள்ள முடியும். அதை எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்டை தாக்கப் பட்ட ரோபோ வாயிலாக செயலிழக்கச் செய்வதன் மூலம் உடைக்க முயல்கிறார் வசீகரன். இதன் பெயர் 'வார்மிங்'. ஆனால் எந்திரன் 'டீ-வார்மிங்' செய்து மீண்டும் 'ஃபார்மேஷன் மோட்'ஐ உருவாக்குகிறார். இறுதியில், 'கமாண்ட்' மோட் மூலம் 'டீ மாக்னடைஸ்' செய்து அனைத்து ரோபோக்களையும் 'டெஸ்ட்ராய்' செய்கிறார்.

இவ்வாறான நிறைய டெக்னிகல் விஷயங்களை ஓரளவிற்கு வசனம் மூலம் சொல்லியிருந்தால் நிறைய பேர் இந்தக் காட்சிகளை வெறும் கிராஃபிக்சாகவோ, கார்ட்டூனாகவோ இல்லாமல், சயின்ஸ் ஃபிக்ஷனாக ரசித்துப் பார்த்திருப்பார்கள்...

அதனால்தான் இந்த பதிவிற்கு டைட்டில் - தமிழில் வந்த இங்கிலீஷ் படம்!

3 comments:

அத்யந்தகாமன் said...

test

Unknown said...

//test/
நீங்க fail

அத்யந்தகாமன் said...

jaisankar jaganathan said...

//test/
நீங்க fail
//

நன்றி ஜயசங்கர் ஜகனாதன். என் பதிவில் முதல் முதலாக கருத்து தெரிவித்ததற்கு நன்றிகள் பல..

Post a Comment