வெள்ளைத் தாமரையில்
வீற்றிருந்து எந்தன்
உள்ளக் கோவிலில்
உறைந்திருப்பாள்..
செல்வமும் வீரமும்
விளைந்திடவே..
எந்தன் சிந்தை
நிறைந்து மகிழ்ந்திருப்பாள்..
நான்முகன் நாயகியின்
நயனதரிசனம்
பெற்றவர் வாழ்வினில்
என்றும் வளம் மிகும்..
கலைவாணியே...
எங்கள் குலதேவியே..
உந்தன் திருப்பாதம்
சரணம் சரணம்...
காத்து அருள்புரிவாய்
இது தருணம் தருணம்..
No comments:
Post a Comment