Monday, October 11, 2010

தமிழ்த்தாய் வாழ்த்து...

காலங்கள் பல கடந்தும்..
கன்னியவள் கலைகளில்
குறைவில்லை..
எங்கள் தமிழ்த்தாயவள்
தயவாலே
தரணியெங்கும் எங்களுக்குத் தீமையில்லை.

தமிழால் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும்
தமிழ்த்தாயே..
எப்போதும் எமைக் காத்திட
நீ வருவாயே...


தமிழே போற்றி..
தாயே போற்றி..

No comments:

Post a Comment